வண்ணத்துப் பூச்சியாய்
நான் மாறவேண்டும்
வாழை தோப்பெங்கும்
பறந்து வர வேண்டும்
மலர்களின் மேலமர்ந்து
கனாக்காண வேண்டும்
மகரந்த தேனெடுத்து
உடல்பூச வேண்டும்
மயக்கத்தில் யாழெடுத்து
இசை மீட்ட வேண்டும்
ஆட்டுக் குட்டியாய்
நானாக வேண்டும்
அரசமர இலைத்தின்ன
தாவ வேண்டும்
உன் அழகான தோள்மீது
இளைப்பாற வேண்டும்
இங்கும்மங்கும் துள்ளி
ஓட வேண்டும்
கம்பங் கதிராக
உருமாற வேண்டும்
உன் கைகளுக்குள் கசங்கி
உணவாக வேண்டும்
கதிரறுக்கும் அறுவாளாய்
நானிருக்க வேண்டும்
உன் ஒய்யார இடுப்பில்
நான் ஓய்வெடுக்க வேண்டும்
செம்பருத்தி பூவாக
நானிருக்க வேண்டும்
உன்சிவந்த விரல் வந்து
எனைப்பறிக்க வேண்டும்
பூசுகின்ற மஞ்சளாய்
நான்வர வேண்டும்
உன்முகம் தொட்ட சுகத்தில்
நான் கவியெழுத வேண்டும்
ஏற்றுகின்ற விளக்காக
நான்சுடர வேண்டும்
உன்னிரு கைகளுக்குள்
உயிர் வாழவேண்டும்
ஆற்றுக்குள் மீனாக
நான் நீந்த வேண்டும்
முந்தாணையில் விழுந்து
என் உயிர் மடிய வேண்டும்
மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும் 
நான் மாறவேண்டும்
வாழை தோப்பெங்கும்
பறந்து வர வேண்டும்
மலர்களின் மேலமர்ந்து
கனாக்காண வேண்டும்
மகரந்த தேனெடுத்து
உடல்பூச வேண்டும்
மயக்கத்தில் யாழெடுத்து
இசை மீட்ட வேண்டும்
ஆட்டுக் குட்டியாய்
நானாக வேண்டும்
அரசமர இலைத்தின்ன
தாவ வேண்டும்
உன் அழகான தோள்மீது
இளைப்பாற வேண்டும்
இங்கும்மங்கும் துள்ளி
ஓட வேண்டும்
கம்பங் கதிராக
உருமாற வேண்டும்
உன் கைகளுக்குள் கசங்கி
உணவாக வேண்டும்
கதிரறுக்கும் அறுவாளாய்
நானிருக்க வேண்டும்
உன் ஒய்யார இடுப்பில்
நான் ஓய்வெடுக்க வேண்டும்
செம்பருத்தி பூவாக
நானிருக்க வேண்டும்
உன்சிவந்த விரல் வந்து
எனைப்பறிக்க வேண்டும்
பூசுகின்ற மஞ்சளாய்
நான்வர வேண்டும்
உன்முகம் தொட்ட சுகத்தில்
நான் கவியெழுத வேண்டும்
ஏற்றுகின்ற விளக்காக
நான்சுடர வேண்டும்
உன்னிரு கைகளுக்குள்
உயிர் வாழவேண்டும்
ஆற்றுக்குள் மீனாக
நான் நீந்த வேண்டும்
முந்தாணையில் விழுந்து
என் உயிர் மடிய வேண்டும்