ஊருக்கு நடுவால
உக்காந்து இருக்கும் சாமி
உலகத்தார் மத்தியில
உன்பலம் என்னன்னு காமி
காசு கொடுத்து
பதவிக்கு வந்தேன் என்கிறான்
கடமையை செய்யுன்னா
கைமேல அழுத்து என்கிறான்
அழுத்தி அழுத்தி
என் ரத்த அழுத்தம் ஏறுது
அழுத்திய பிறகும்
பேப்பர் மேஜையில தூங்குது
ஓட்டைப் பிரிச்சி
திருடன் உள்ளே வந்தான்
அவனை கண்டுபிடிக்க
கதவை திறந்து காக்கியும் வந்தான்
பொண்டாட்டி நகைகளும் போச்சி
என் கைப்பணமும் கையூட்டா ஆச்சி
முட்டி முட்டிப் படிச்சப்புள்ள
முக்காலுக்கும் மேல
மார்க்குகளை வாங்கி
டாக்டரு சீட்டுப்போயி கேட்டா
லச்ச லச்சமாய் கேட்கிறான் பேட்டா
கரைவேட்டி புண்ணாக்கு
கைநாட்டு அண்ணாச்சி
கல்லூரி சேர்மனாம்
கண்வலிக்க படிச்சவன்
புத்தகத்த
கரைச்சிக் குடிச்சவன்
வாசலுக்கு காவலாம்
பள்ளிக்கூடம் கட்டுன்னா
தண்ணிக்கூடம் கட்டுறான்
தண்ணி வித்த பணத்தால
சலுகைகள கொட்டுறான்
தாலியை அறுத்துப்புட்டு
தலைக்குபூவை சூட்டுறான்
அப்பனும் புள்ளையும்
அடுத்து வந்த வாரிசும்
அரசாச்சி செய்ய துடிக்கிறான்
ஆனாலும் தான் மட்டும் உத்தமன்
மாதிரி நடிக்கிறான்
தட்டிக் கேட்கயாரும்
தலையை தூக்கிப்புட்டா
கல்லைப் போட்டு
கதையை முடிக்கிறான்
சூரன் ஒருவனைக் கொல்ல
உங்கம்மா பெத்தாளாம் வீரப்புள்ள
கால்தடுக்கி விழுந்த இடம் மொத்தம்
சூரன் எக்காளச் சிரிப்பு சத்தம்
ஆனைக்காது உனக்கு சாமி
சிரிப்புச் சத்தம்
கேட்கலைன்னா தாங்காது பூமி
ஊருக்கு நடுவால
உக்காந்து இருக்கும் சாமி
உலகத்தார் மத்தியில
உன்பலம் என்னன்னு காமி
மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும் 
உக்காந்து இருக்கும் சாமி
உலகத்தார் மத்தியில
உன்பலம் என்னன்னு காமி
காசு கொடுத்து
பதவிக்கு வந்தேன் என்கிறான்
கடமையை செய்யுன்னா
கைமேல அழுத்து என்கிறான்
அழுத்தி அழுத்தி
என் ரத்த அழுத்தம் ஏறுது
அழுத்திய பிறகும்
பேப்பர் மேஜையில தூங்குது
ஓட்டைப் பிரிச்சி
திருடன் உள்ளே வந்தான்
அவனை கண்டுபிடிக்க
கதவை திறந்து காக்கியும் வந்தான்
பொண்டாட்டி நகைகளும் போச்சி
என் கைப்பணமும் கையூட்டா ஆச்சி
முட்டி முட்டிப் படிச்சப்புள்ள
முக்காலுக்கும் மேல
மார்க்குகளை வாங்கி
டாக்டரு சீட்டுப்போயி கேட்டா
லச்ச லச்சமாய் கேட்கிறான் பேட்டா
கரைவேட்டி புண்ணாக்கு
கைநாட்டு அண்ணாச்சி
கல்லூரி சேர்மனாம்
கண்வலிக்க படிச்சவன்
புத்தகத்த
கரைச்சிக் குடிச்சவன்
வாசலுக்கு காவலாம்
பள்ளிக்கூடம் கட்டுன்னா
தண்ணிக்கூடம் கட்டுறான்
தண்ணி வித்த பணத்தால
சலுகைகள கொட்டுறான்
தாலியை அறுத்துப்புட்டு
தலைக்குபூவை சூட்டுறான்
அப்பனும் புள்ளையும்
அடுத்து வந்த வாரிசும்
அரசாச்சி செய்ய துடிக்கிறான்
ஆனாலும் தான் மட்டும் உத்தமன்
மாதிரி நடிக்கிறான்
தட்டிக் கேட்கயாரும்
தலையை தூக்கிப்புட்டா
கல்லைப் போட்டு
கதையை முடிக்கிறான்
சூரன் ஒருவனைக் கொல்ல
உங்கம்மா பெத்தாளாம் வீரப்புள்ள
கால்தடுக்கி விழுந்த இடம் மொத்தம்
சூரன் எக்காளச் சிரிப்பு சத்தம்
ஆனைக்காது உனக்கு சாமி
சிரிப்புச் சத்தம்
கேட்கலைன்னா தாங்காது பூமி
ஊருக்கு நடுவால
உக்காந்து இருக்கும் சாமி
உலகத்தார் மத்தியில
உன்பலம் என்னன்னு காமி