Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

   டிப்பறிவு இல்லாத மீடியத்தின் மூலம் காமராஜன் ஆவியை அழைத்து அரசியல் விவாதங்களில் ஈடுபட்டதிலிருந்து ஆவிகளைப் பற்றிய நம்பிக்கை பல மடங்கு வளர்ந்தது.  இதன் அடிப்படையில் இதே போன்று மிகச் சாதாரண மனிதர்களைப் பயன்படுத்தி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் ஆவிகளை அழைத்துப் பேசும் முறையைக் கையாண்ட போது பல விஷயங்களில் புதிய கோணங்களைக் காண முடிந்தது.  இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் நெப்போலியனின் ஆவியை அழைத்து மீடியம் வாயிலாகப் பேசுகிறோம் என்றால் அந்த மீடியத்திற்கு நெப்போலியனைப் பறறி எந்தவிதமான செய்திகளும் தெரியாமலும் அவன் வாழ்ககை சம்பவத்தில் ஒரு சிறு துளி கூட அறியாமலும் இருந்தார்கள் என்பது குறிப்படத்தக்கது.



    இப்படி ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவனை மீடியமாக்கி மகாகவி பாரதியாடம் பேசினோம்.  அவரிடம் இந்து மதத்தில் பெண்கள் அடிமைபோல் நடத்தப்படுவதாக மேற்கத்திய அறிஞர்கள் கூறுகிறார்களே அது உண்மையா என்று கேட்டோம்.

    மீடியமாக இருந்தவனின் முகம் சிவந்தது.  துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வெளிப்படுவது போல் மிகக் காட்டமான வார்த்தைகள் வெளிவந்தன.  பட்டுத்துணியும் விமானத் தொழில் நுட்பமும் நாம் அறிந்திருந்த காலத்தில் பச்சை மாமிசம் தின்னும் மரக்கிளையில் வாழ்ந்த வெள்ளைக் கோட்டான்கள் எப்போதுமே தன்னைத் தவிர மற்றவர்களை மனிதனாக கூட மதித்தது இல்லை.  இது தெரியாத இந்தியாவிலிருக்கும் பாமரப் படிப்பாளிகள் மேற்கிலிருந்துதான் சொர்க்கம் ஆரம்பிக்கிறது என்றும் கனவு கண்டு கோண்டு இருக்கிறார்கள்.  பெண்ணை மதிக்காதது நாமா? அவர்களா?  மூடர்களின் மூளைக்கு சவுக்கால் அடித்துத்தான் எதையும் சொல்ல வேண்டும்.

    அலக்சாண்டரும், முகமதிய கூட்டத்தாரும் இந்த நாட்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் தாதர் என்ற நிலைமை இன்றி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக ஆண்டார்கள்.  இந்த நாட்டில் அதற்கு ஆதாரம் தருகிறேன் கேள்.  அதர்வண வேதத்தை அறிந்திருக்கிறீர்களா நீங்கள்.  அதில் பெண்கள் உபநயனம் செய்யவும் சிரௌத்த சூத்திரங்களைக் கூறவும் வேதமந்திரங்களைப் பயிலவும், பயிற்றுவிக்கவும் உரிமை இருந்ததை வெளிச்சம் போட்டுச் காட்டி இருப்பதைப் பாருங்கள்.  வடமொழியின் இலக்கண நூலான பாணிநி நூலில் அஷ்டாத்யாயில் பெண்கள் குருகுலத்தை நடத்திய விதத்தையும் அவர்கள் கல்வி பயின்ற அழகையும் தெளிவாகக் கூறி இருக்கின்றதை படித்தவர்கள் அறிவார்கள்.  பதஞ்சலி யோக சூத்திர மஹாபாஷ்யத்தில் ரிஷிகளாகவும் குருமார்களாகவும் பெண்கள் இருந்தது தெளிவாகக் காட்டி இருக்கிறது.

  அதோடு மட்டுமல்ல வேதாந்தங்கள் என்று அழைக்கப்படும் உபநிஷதங்கள் பலவும் ஆணும பெண்ணும் உரையாடும் விதமாகவே அமைந்திருக்கிறது.  உதாரணமாக ஜனகரும், கல்ப்பாவும், யஞ்சவல்கியரும், கார்க்கியும், மைத்ரேயியும் உரையாடி இருப்பதைக் காணலாம்.  ரிக்வேத மந்திரங்களை பெருவாயான பெண் ரிஷிகளே கண்டு எழுதி இருக்கிறார்கள்.  படிப்பதற்காகவும். படிக்க வைப்பதற்காகவும் திருமணமே புரியாமல் வாழ்ந்த பெண்களை பிரம்மவாதிணிகள் என்று பழைய நூல்கள் பல பறை சாற்றுகின்றன.  கௌசாம்பிகை ஆண்ட மன்னனின் மகள் ஜெயந்தி தத்துவ போதனைக்காகவே அரச வாழ்வையும் தாம்பத்ய வாழ்வையும் தூக்கி எறிந்ததை பௌத்த ஜெயின இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.

    பழம்பெரும் தமிழ் இலக்கியமான பெரும்பாணாற்றுப் படையில் உலகை பெண் ஈன்றதாகவும் அதனால் மண்ணுலகமே மேடு ஆனதாகவும் அதாவது தாயின் வயிறாக ஆனதாகவும் நச்சினார்க்கு இனியர் உரையில் தெரிகிறது.  அகிலமே பெண் சக்தியின் வடிவம் என்று தாயுமானவர் பாடியிருப்பதையும் திருவாரூர் புராணத்தில் உலகை ஈன்ற முழு பெருங்கன்னி என்று வரும் வரிகளும் கடல் கொள் செல்வி என்று அகநானூறு நீர்நிலக் கடவுள் என்று மணிமேகலையும் பெண்ணை சிறப்பித்துப் பேசுவதையும் அறியாத மூடர்கள் பிலாக்கணம் பேசுவது வெறும் ஒப்பாரியே தவிர வேறு ஒன்றும் இல்லை.
    சிலப்பதிகாரத்தில் நாடாளும் மன்னன் முன் ஒரு பெண் நின்று நீதி கேட்கிறாள்.  அதுவும் அந்த நாட்டுப் பெண் அல்ல அந்நிய நாட்டுப் பெண்.  பெண்கள் அடிமைப்பட்டு வீட்டுக்குள் அடைந்து கிடந்து இருந்தால்.  ஆக்ரோஷத்தோடு அரசவைக்கு வருவாளா?  அரசனுக்கு எதிராக வாதத்தில் ஈடுபடுவாளா?   அந்நியர்கள் நம் அன்னை பூமியில் கால்பதித்த பிறகு தான் நம் குலதர்மத்தைக் காப்பாற்ற பெண்கள் பாதுகாக்கப்பட்டனர்.  அதன்பின் சில சுயநலக்காரர்களான நம்மவர்கள் அதையே சாஸ்திரம் என்றும் தர்மம் என்றும் பசப்பிக் கூறி பெண்களை அடிமைப் பொருட்களாக்கி விட்டனர்.

    இந்தியாவிலும் இந்து மதத்திலும் மட்டும்தான் பெண் அடிமைத்தனம் இருக்கிறது என்று பேசுபவர்கள் கிருஸ்துவ மதத்திலும் இஸ்வாம் மதத்திலும் உண்மையாகவே இருக்கும் பெண் அடிமைத்தனத்தைப் பற்றி துணிச்சலுடன் பேசுவார்களா?  அவர்களால் பேச முடியாது.  காரணம் இந்தியாவும் இந்துக்களும்தான எதை வேண்டுமென்றாலும் சகித்துக் கொள்வார்கள்.  கிருஸ்துவர்களைத் திட்டினால் சிலுவைப்போர் மூளும், இஸ்லாமியர்களை ஏசினால் ஜிகாத் வெடிக்கும்.
     அந்த இரண்டு மதத்திலும் உள்ள பெண் அடிமைக் தனத்தை கூறுகிறேன் கேள்.  மெல்லிய உடுப்பும் இரத்த தாம்பரமும் அவள் ஆடை. அவள் ஆடை பலமும் அலங்காரமுமாய் இருக்கிறது.  வருங்காலத்தைப் பற்றியும் மகிழ்கிறாள் (உங்களை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்வதுடன் மலர்ந்த முகத்துடனும் காணப்பட வேண்டும்).  நீதி 31.26 ல் தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள். தயை உள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.  தீத்து 2.5 ல் தெளிந்த புத்தி உள்ளவர்களும் கற்புள்ளவர்களும் வீட்டில் தரித்து இருக்கிறவர்களும் நல்லவர்களும் தங்கள் புருஷர்களுக்குக் கீழ் படிகிறவர்களும் போதிக்கிறவர்களாக இருக்கும் படியும் முதிர் வயது உள்ள ஸ்திரிகளுக்கு புத்தி சொல்லு நீதி 31.15 ல் இருட்டோடு எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுத்து என்றும் எபே  4.26 ல் நீதி 15.1 ல் ஒருவரோடு ஒருவர் கோபத்துடன் படுக்கைக்குச் செல்லாதீர் என்றும் வரும் வரிகளைப் பார்.  பெண்களை மெல்லிய ஆடைகளைதான் அணிய வேண்டும்.  வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.  சமையல் வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது.  தனது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் கணவனுக்குப் படுக்கை இன்பம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கர்த்தரின் பெயரால் இயங்கம் கிருத்துவ மதம் கட்டளை இடுகிறது.

    அதுமட்டுமல்ல.  பைபிளில் கூறப்பட்டு இருக்கின்ற இன்னொரு கொடுமையான விஷயத்தையும் சொல்லுகிறேன்.  பைபிள் எண் 31 33 40ம் 11 சா.மு. 12, 11ல் பெண்ணைக் கற்பழிக்கவும், கடத்தி வந்து பங்கிட்டுக் கொள்ளவும் வழிவகைகள் கூறப்பட்டு இருக்கிறது.  படைவீரர்கள் கொள்ளை இட்ட பொருட்களில் ஆயிரக்கணக்கில் ஆடுகளும், மாடுகளும்,  கழுதைகளும், ஒட்டகங்களும் இருந்ததாகவும் புருஷ போகத்தை அறியாக பெண்கள் இருந்ததாகவும் அவைகளில் பாதிப்பகுதியை கர்த்தருக்கு விட்டு விடும்படியும் (தேவதாசிகளாக) கூறப்பட்டு இருக்கிறது. 
    இன்னும் ஒரு அநியாய வசனம் பைபிளில் வருகிறது.  கர்த்தர் சொல்லுவது என்னவென்றால் இதோ உன் வீட்டில் நான் பொல்லாப்பை உன் மேல் உண்டுபண்ணி உன் ஸ்தீரிகளை எடுத்து அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்த பட்டப்பகலில் சூரிய வெளிச்சத்தில் உனது ஸ்தீரிகளோடு சயனிப்பான் என்று வருகிறது.  இதற்கு மேலும் பல வக்ரவசனங்கள் ஆதி ஹீப்ரு மொழியில் பைபிளில் உள்ளது.  அவை இன்று கிருஸ்துவ மேலாண்மைக்காரர்களால் வெட்டி எடுக்கப்பட்டு விட்டன.

    கிருத்துவ சமூக அமைப்பில் பெண்கள் கொள்ளையடிக்கப்படும் பொருளாக இருந்ததையும் அவர்களை பிரபு வம்சத்தினரும் அவர்களின் அடியாட்களும் பங்கிட்டுக் கொண்டதையும் எவ்வளவு மூடி மறைத்தாலும் வெளிச்சத்திற்கு வருவதை யாரும் தடுக்க இயலாது.  ஆதி பைபிள் மூலத்தை வார்த்தைக்கு வார்த்தை எந்தவித சார்பு நிலையும் இல்லாது மொழி பெயர்த்தால் பாதிரிகள் குறிப்பிடும் அன்பு மதம் என்பது பலாத்காரத்தாலும் ஆதிக்க வெறியாலும் நிரம்பி இருப்பதைக் காணலாம்.

    இஸ்லாம் மதத்திலோ பெண்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.  திருக்குர்-ஆன்ல் அத்தியாயம் 2.222.223 உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர்.  நீங்கள் விரும்பும் முறையில் உங்களுடைய விளை நிலங்களுக்கு செல்லுங்கள் என்றும் அத்யாயம் 4,3,7,11,12ல் அநாதைப் பெண்களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டு இரண்டாகவோ நான்கு நான்காகவோ பதினாறு பெண்கள் வரையில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.  ஆனால் பெண்களின் விருப்பப்படி அந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. 
 
   மேலும் குர்ஆன் 4ம் அத்தியாயம் 34, 35 சுராக்களில் ஆண்கள் பெண்களை ஆட்சி புரிவோர் அவார்கள்.  இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களுக்கு உயர்வை அளித்திருக்கிறான்.  ஆண்கள் தங்கள் செல்வத்திலிருந்து பெண்களைப் பேணுவதால் பெண்கள்  மாரு செய்வார்கள் என்று சந்தேகப்பட்டால் அப்பெண்களை அடியுங்கள்.  மேலும் பெண்களுக்கு மேலுலகில் மிருகங்களுக்கு கிடைக்கும் சோர்க்கமே அமையும் என்றும் பெண்களின் சாட்சி அரைசாட்சிதான் என்றும் ஆண்கள் வழிபடும் போது வழிபாட்டு இடங்களில் பெண்கள் வழிபடக் கூடாது என்றும் விரல்கூட தெரியாத வண்ணம் பெண்கள் உடலை மூடிமறைக்க வேண்டுமென்றும் இஸ்லாம் மதத்தின் பல நூல்கள் கூறுகின்றன.  மேலும் இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கூட இன்னும் அந்த மதத் தலைவர்கள் வழங்கவில்லை.

    இஸ்லாம் மதத்திலும் கிருஸ்துவ மதத்திலும் பெண்களை அடிமைகளாக இப்படிச் சித்தரிக்கப் பட்டு இருக்கின்ற போது எதைவைத்து இவர்கள் இந்துப் பண்பாட்டை குறை கூறுகிறார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.  பெண்ணுக்குச் சுதந்திரம் என்றால் குழந்தைக்குப் பால் கொடாமலும் மது அருந்தியும் அரை குறை ஆடைகளோடு நடமாடுவதைத் தான் பெண் சுதந்திரம் என்கிறார்களா?  அது தான் சுதந்திரம் என்றால் அந்தச் சுதந்திரம் நமது பெண்களுக்குத் தேவை இல்லை.
 
    மீடியத்தின் வாயிலாக அதிர்வேட்டுகளாக பாரதியார் வெடித்துத் தள்ளினார்.  இதேபோன்று முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு உயரிய ஆவியை அந்த ஆடு மேய்க்கும் இளைஞன் மீது வரச்செய்து பேசினோம்.  நீலகண்ட சாஸ்திரி என்னும் அந்த ஆவி தான் வாழும் காலத்தில் தமிழ் இலக்கியங்களிலும் சர்வதேச கடல் ஆராய்ச்சியிலும் நன்கு நிபுணத்துவம் கொண்டிருந்தவர் ஆவார்.  அவரிடம் சுனாமியின் சரித்திரத்தைக் கூறும்படிக் கேட்டோம்.  அவர் சொல்ல ஆரம்பித்தார் அவர் கூறிய விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்
 

Contact Form

Name

Email *

Message *