Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஊழலை மறைக்க காங்கிரஸ் செய்யும் சதி...?


     ராகுல் காந்தியை வளர்ந்து வருகின்ற இளம் தலைவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று சிலர் நம்பிக்கொண்டிருந்தார்கள் தேசிய நதிநீர் இனைப்புத் திட்டத்திலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த எடுத்துக் கொண்ட முயற்சியிலும் அவருக்கு ஒரளவு அரசியல் விழிப்புணர்வு இருப்பது போல ஒரு தோற்றமும் கூட தென்பட்டது

   ஆனால் அவரின் சமீபகால நடவடிக்கைகள் எதுவும் திருப்திகரமாக இல்லை என்பதை விட கேலிக்குறியதாக இருக்கிறது என்றே சொல்லலாம்


   இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்து பயங்கரவாதம் அச்சுருத்தலாக இருக்கிறது என்பதை விட லஷ்கரிய பயங்கரத்தை விட அதிக தாக்கம் தரக்கூடியது என்கிறார் இந்தக் கூற்று வரலாற்று விழிப்புணர்வு இல்லாதது சிறுபிள்ளைத்தனமானது!

   இந்தியச் சரித்திரம் அவருக்குத் தெரிந்திருந்தால் இப்படிப் பட்டக் கருத்துக்களை கூறியிருக்க மாட்டார் காஷ்மீரில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது யாரால் என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை

    பரூக் அப்துல்லா இந்திரா காந்தியின் முறைகேடான தேர்தல் தில்லுமுல்லுக்கள் தான் அப்பாவி காஷ்மீர் மக்களை பாக்கிஸ்தான் கைபாவைகளாக ஆக்கியது இன்று வரை அந்த மாநிலத்தில் துப்பாக்கிச் சத்தம் ஓயாமல் இருப்பதற்கும் வெளிநாட்டுச் சக்திகள் தொடர் ஊடுருவல் நடத்துவதற்கும் காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம்

   பஞ்சாபில் பிந்திரன்வாலேயை சிரோன்மணி பிரபந்த கமிட்டிக்கும் அகாலித்தளத்திற்கும் எதிராக கொம்பு சீவி விட்டதும் காங்கிரஸ்தான் அதன்பிறகு காலிஸ்த்தான் தீவிரவாதமாக அது உருவானதும் பல்லாயிரம் அப்பாவி சீக்கிய மக்கள் உயிர் உடமைகளை இழந்ததும் காங்கிரசின் அதிகார வேட்டையால்தான்


   ஆந்திரா மற்றும் கிழக்கு மாநிலங்களில் நக்சல் தீவிரவாதம் உருவானதற்கும் இன்றும் பல்கி பெறுகி வருவதற்கும் முழுப்பொருப்பாளி காங்கிரஸ்தான்

  ஒருகாலத்தில் உத்திரபிரதேசத்தில் கொடிகட்டிப் பறந்த சம்பல் கொள்ளைக்காரர்களின் அதிகாரப் பீடமே காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்தான்

   இலங்கை மக்களின் சுதந்திரப் போராட்டத்தை தங்களது சொந்த கௌரவப் பிரச்சினையாய் பார்த்து போராளிக்குழுக்களை திசைமாற வைத்ததும் இன்று சிங்கள அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பயங்கரவாதச் செயலுக்கு ஊக்கம் வழங்கி வருவதும் காங்கிரஸ்தான்

   அருணாச்சல பிரதேசம் நாகலாந்த் மணிப்பூர் போன்ற பகுதிகளில் பழங்குடி மக்களை ஆயுதபாணிகளாக்கி வருவதும் காங்கிரஸ் தான்

   பங்களாதேஷ் நாட்டிலிருந்து தொடர்ச்சியாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் ஊடுருவலையும் சீனாவில் எல்லை தாண்டும் அத்துமீறலையும் கட்டுப்படுத்த முறைப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கைகட்டி நிற்பது கூட ஒருவித பயங்கரவாச் செயல்தான்


   இன்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதை அற்ப ஓட்டுச்சீட்டுக்காக மௌனமாக கண்டும் காணாமல் இருப்பது தேசப்பற்று செயலா?

  நிச்சயம் இல்லை காங்கிரசின் பல்வேறு பயங்கரவாத ஆதரவு நடவடிக்கையில் அதுவும் ஒன்றுதான் !

   ஓபராய் ஓட்டலை தாக்கியதும் பாராளும் மன்றத்திற்குள் ஆயுத தாக்குதல் நடத்தியதும் நாட்டில் மும்பை உட்பட பலபகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்தியதும் கந்தகாருக்கு விமானத்தை கடத்தியதும் காஷ்மீரில் தினம் தினம் பாதுகாப்பு படையினரோடு ஆயுதத்தாக்குதல் நடத்துவதும் யார் என்பது ராகுல் காந்திக்குத் தெரியாதா

   அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறாரா? அப்படி அவசியமில்லை என்று அவர் நினைத்தாரானால் அவரே பயங்கரவாதச் செயலுக்கு மூலவித்தாவார்

  மேலும் இந்த காலகட்டத்தில் இப்படி இவர் சொன்னதாக ஊடகங்கள் செய்தி பரப்புவதில் வேறொறு சூட்சியும் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை

  நாடு முழுவதும் 2ஜி அலைக்கற்றை ஊழலை ஒருவித கொதிப்புடனே பார்த்து வருகிறார்கள் இந்த ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும் நடவடிக்கைகளும் அந்த கட்சியின் தலைமை மேல் பலத்த சந்தேகத்தை உருவாக்கி வருகிறது

   இந்த இழிநிலையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் எதிர் கட்சிகளை வாதப்பிரதி வாதங்களில் தள்ளவும் திட்டமிட்டு நடை பெறும் சதியாகவும் இருக்கலாம்

  காரணம் காங்கிரஸ் வாலாக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார்கள்



Contact Form

Name

Email *

Message *