Store
  Store
  Store
  Store
  Store
  Store

பூனை வந்தால் பணம் வருமா...?


  னது தாயாருக்கு என்மீது எவ்வளவு பிரியமோ அவ்வளவு பிரியம் பூனை நாய்குட்டிகள் மீதும் உண்டு

அவர்களின் செல்லபிராணி வரிசையில் ஆட்டுக்குட்டி அணில் புறா கிளி மைனா என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்

பூனைகளுக்கும் நாய்களுக்கும் பால் அரிசிக்கான மாதப் பட்ஜட் தனியாகவே ஒதுக்குவார்கள்

ஒரு முறை பக்கத்து வீட்டிலிருந்து வந்த பூனை அவர்கள் கையை பூரி விட்டுவிட்டது

இங்கிருக்கும் பூனை போதாது என்று விருந்தாளிப் பூனை வேறா எல்லாவற்றையும் துரத்தனுமென்று கோபத்தில் சொன்னேன் 


 அப்படி அசட்டுத்தனமா பேசாதே பக்கத்து வீட்டுப் பூனை நம் வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம் வரும் என சொன்னார்கள்

இப்படி எனது தாயார் மட்டுமல்ல பலரும் நம்புகிறார்கள் இந்த நம்பிக்கை சரியானதுதானா என்று யோசித்துப் பார்த்தேன்

ஆதிகால மனிதன் வேட்டையாடி உயிர் வாழ்ந்தான்.  அப்போது அவனுக்கு நாய் தோழனாக இருந்தது.

 அவன் கொஞ்சம் வளர்ச்சி பெற்ற பிறகு வேளாண்மைக்கு மாடுகள் நண்பனாக இருந்தன.

  தானியங்களை வீட்டில் சேர்த்து வைக்க துவங்கிய போது எலிகளை விரட்டி அடிக்க பூனைகளை நட்பாக்கி கொண்டான்.

 ஆக மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள தொடர்பு கால காலமாக இருந்து வருகிறது.


   மைலாப்பூரிலிருந்து புகழ் பெற்ற பெண் மருத்துவர் ஒருவர் அவசரமாக என்னை தொலைபேசியில் அழைத்தார்.

 போன் வந்த நேரம் என்ன தெரியுமா?  அதிகாலை இரண்டரை மணி.

 அவர் விட்டில் வளர்த்த பூனைக்குட்டி தெரு நாயால் கடிக்கப்பட்டு மரணத்தோடு போராடுகிறதாம். 

அந்த நேரத்தில் எந்த மிருக வைத்தியரும் அழைத்தால் வரமாட்டார்களாம்.

 பூனைக்குட்டியின் வலி குறையவும் அது சாகாமல் பாதுகாக்கப்படவும் கடவுளிடம் என்னை பிராத்தனை செய்ய சொன்னார்கள். 

என்னை பொறுத்த வரை அந்த நேரம் தான் சற்று கண் அயரும் நேரம்.  அந்த நேரத்தில் இப்படியொரு வேண்டுகோள் வந்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்.  அப்படி தான் எனக்கும் இருந்தது. 


  ஆனால் உடனடியாக ஒரு சிந்தனை என் மூளையில் வெட்டியது.

 ஊசல் ஆடுவது ஒரு உயிர்.  அது பூனை உயிராக இருந்தால் என்ன குழந்தை உயிராக இருந்தால் என்ன, எல்லாவற்றையும் சமமாக மதிக்கும் ஒருவன் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேற்றுமை காண்பது முட்டாள் தனம் என்று தோன்றியது.

  இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் சில மனிதர்கள் மிருகங்களிடம் வைத்திருக்கும் பாசத்திற்கு தகுதி தாராதரம் எல்லாம் ஒரு தடையே அல்ல.

அன்பு எல்லையில்லாதது என்பதற்காக தான் சொல்கிறேன்.

  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். 


  இதில் மிருகங்களையும் சேர்த்து கொள்ளலாம்.  நான் தங்கியிருக்கும்  வீட்டிலிருந்து ஆசிரமத்திற்கு கிளம்பும் வரை வேலிக்கு வெளியிலேயே தினசரி சில தெரு மாடுகள் காத்து நிற்கும்.

 எனது கார் அவைகளை தாண்டுகிறதோ இல்லையோ எல்லா மாடுகளும் வேலியை தாண்டி வீட்டிற்கருகில் சென்று விடும்.

 எனது தாயார் அவைகளுக்கு பழைய சாதமும் கழுநீரும் வைப்பார்கள்.

 அதற்காகவே எவ்வளவு நேரம் என்றாலும் இரவு ஆனாலும் கூட காத்து கிடக்கும்.

  நாம் மிருகங்களின் மீது அன்பு வைத்தால் அவைகளும் நம்மீது பரிவு காட்டும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.  


மிருகங்களை பரிவுடன் பாராமரித்தால் அவைகள் நம் உடமைகளை பாதுகாக்கும் என்பதை பல உதாரணங்களின் மூலம் சொல்லலாம்.

  நாய்களை போலவே பூனைகளும் நம்மை அண்டி வாழும் ஜீவன்கள் தான்.

  பக்கத்து வீட்டு பூனை நம் வீட்டிற்கு வந்தால் பாலை மட்டும் குடித்துவிட்டு செல்லாது.  சேட்டை செய்யும் எலிகளையும் வேட்டையாடி தான் செல்லும்.

 எலிகள் நோய்களை உற்பத்தி செய்யும்  விலங்குகள் அவைகளின் மூத்திரம், ரத்தம் எதாவது ஒரு வகையில் நம் உடல் மீது பட்டால் நாம் பலவீனமாக இருக்கும் போது நோய்களாக நம்மை தாக்கும்.  

 நோயை தரும் எலிகள் இல்லாது இருந்தால் ஆரோக்கியம் தானே.

  ஆரோக்கியம் வந்து விட்டால் செல்வம் தானாக வரும்.

  எனவே பூனைகள் செல்வத்தை கொண்டு வரும் என்பதில் தவறும் இல்லை.

 ஆனால் பக்கத்து வீட்டு பூனை வந்தால் தான் செல்வம் வரும் என்பது அறியாமையாகும்.





 

Contact Form

Name

Email *

Message *