தூத்துக்குடி கிறிஸ்டோபர் பெர்னாண்டோ என்ற அன்பர் மின்னஞ்சலில் குருஜிக்கு சில கேள்விகள் அனுப்பியிருந்தார் அவர்களது கேள்விகளும் அதற்க்கான குருஜியின் பதில்களும் கீழே தருகிறோம்
இயேசு கிறிஸ்துவை கிறிஸ்த்துவர் அல்ல என்று நீங்கள் சொல்லியிருப்பது எந்த வகையில் நியாயம்?
இயேசு நாதர் இஸ்ரேல் நாட்டில் பிறந்தவர் என்பது உலகமறிந்த செய்தி அவர் தந்தை ஜோசப்பும் தாய் மரியாளும் சுத்தமான யூதர்கள் என்று தனியாக சொல்ல தேவையில்லை இந்த உலகத்தில் சுன்னத் என்ற விருத்தசேதன சடங்கை முக்கியமானதாக கொண்டது யூதர்களும், இஸ்லாமியர்களுமே ஆவார்கள் இயேசு கிறிஸ்த்துவிற்கும்,விருத்தசேதன சடங்கு நடந்திருக்கிறது.
இயேசு கிறிஸ்துவை கிறிஸ்த்துவர் அல்ல என்று நீங்கள் சொல்லியிருப்பது எந்த வகையில் நியாயம்?
இயேசு நாதர் இஸ்ரேல் நாட்டில் பிறந்தவர் என்பது உலகமறிந்த செய்தி அவர் தந்தை ஜோசப்பும் தாய் மரியாளும் சுத்தமான யூதர்கள் என்று தனியாக சொல்ல தேவையில்லை இந்த உலகத்தில் சுன்னத் என்ற விருத்தசேதன சடங்கை முக்கியமானதாக கொண்டது யூதர்களும், இஸ்லாமியர்களுமே ஆவார்கள் இயேசு கிறிஸ்த்துவிற்கும்,விருத்தசேதன சடங்கு நடந்திருக்கிறது.
இயேசுவின் பெற்றோர்கள் யூதமத சம்பிராதயங்களை பக்தி சிரத்தையுடன் பின்பற்றியதினால் தான் ஜெருசலம் நகரில் உள்ள ஆலயத்திற்கு பன்னிரெண்டு வயது நிரம்பிய தங்களது குமாரனை அழைத்து சென்றனர். ஆக வரலாற்றின் படி இயேசு யூத மதத்தில் தான் பிறந்து இருக்கிறார். அந்த மத மரபுபடி தான் வளர்க்கவும் பட்டிருக்கிறார்.
யூத கடவுளையே தனது பிதாவாக கருதியதினால் தான் ஆலயத்திற்குள் வியாபாரம் செய்த வியாபாரிகளை தூரத்திவிட்டு என் தந்தையின் வீட்டை சந்தையாக்காதீர்கள் என எச்சரித்தார்.
தான் வாழ்நத காலத்திலேயே தனது சிந்தனைகளை, கோட்பாடுகளை ஒரு மதம் அல்லது மார்க்கம் என்று பகீரங்கமாக அறிவித்தது முகமதிய நபி ஒருவர் மட்டுமே புத்தராகட்டும், வர்த்தமான மகாவீரர் ஆகட்டும் தங்களது உபதேசங்களை எப்போதுமே இது ஒரு தனி மதபிரிவு என்ற நோக்கில் செய்தது கிடையாது. அவர்கள் காலத்திற்கு பிறகு தான் அவர்களின் கொள்கைகள் மதங்களாக உருவெடுத்தன.
யூத கடவுளையே தனது பிதாவாக கருதியதினால் தான் ஆலயத்திற்குள் வியாபாரம் செய்த வியாபாரிகளை தூரத்திவிட்டு என் தந்தையின் வீட்டை சந்தையாக்காதீர்கள் என எச்சரித்தார்.
தான் வாழ்நத காலத்திலேயே தனது சிந்தனைகளை, கோட்பாடுகளை ஒரு மதம் அல்லது மார்க்கம் என்று பகீரங்கமாக அறிவித்தது முகமதிய நபி ஒருவர் மட்டுமே புத்தராகட்டும், வர்த்தமான மகாவீரர் ஆகட்டும் தங்களது உபதேசங்களை எப்போதுமே இது ஒரு தனி மதபிரிவு என்ற நோக்கில் செய்தது கிடையாது. அவர்கள் காலத்திற்கு பிறகு தான் அவர்களின் கொள்கைகள் மதங்களாக உருவெடுத்தன.
இதே போலத்தான் இயேசு நாதரின் மரணத்திற்கு பிறகே அவருடைய உபதேசங்களை ஒரு மத கொள்கையாக உருவாக்கினார்கள். பௌத்த மதத்தை உருவாக்கிய கௌதமபுத்தர் எப்படி ஒரு பௌத்தர் இல்லையோ அப்படியே இயேசும் ஒரு கிறிஸ்த்துவர் அல்ல நான் இதை அவர் மீது களங்கப்படுத்த சொல்லவில்லை மாறாக கௌரவப்படுத்தவே சொல்கிறேன். கிறிஸ்த்துவ மதம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தாருக்கு மட்டுமே சொந்தமானது ஆனால் இயேசுநாதர் உலக முழுமைக்கும் சொந்தமானவர் அவரை தனிப்பட்ட மதமோ,நிறுவனமோ நாடோ சொந்தம் கொண்டாட முடியாது.
மேலும் இயேசுநாதரின் கொள்ளை கிறிஸ்த்துவ மதத்தார் மட்டுமே முழுமையாக கடைப்பிடிக்கிறார்கள். எனவே அவர் அவர்களுடைய தனி சொத்து என்று யாரும் வாதாட முடியாது காரணம் இன்றைய கிறிஸ்த்துவர்களில் 98 சதவீதம் பேர் இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை புரியாதவர்கள் அவர் சொற்படி நடக்காதர்கள் இன்று தங்களை கிறிஸ்த்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் மனிதர்கள் அவர் கூறியப்படி மட்டுமே வாழ்க்கை முறையை நடத்தி கொண்டிருந்தால் இன்யை உலகில் எந்த சிக்கலுமே இல்லாமல் இருந்திருக்கும்
ஆனால் அப்படி யாருமே இல்லை அதனால் கிறிஸ்த்துவ மதத்திற்கும், இயேசுவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எனது உறுதியான கருத்து அதனாலும் இன்றைய பாதிரியார்களில் பலர் மனிதர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமானால் கிறிஸ்த்தவ சமயத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஞானஸ்தானம் செய்து கொண்டால் மட்டுமே முடியும் என்று பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்கள் அதனால்தான் ஏசு கூட பிறப்பால் கிறிஸ்த்தவர் அல்ல என்று சொன்னேன்
மேலும் இயேசுநாதரின் கொள்ளை கிறிஸ்த்துவ மதத்தார் மட்டுமே முழுமையாக கடைப்பிடிக்கிறார்கள். எனவே அவர் அவர்களுடைய தனி சொத்து என்று யாரும் வாதாட முடியாது காரணம் இன்றைய கிறிஸ்த்துவர்களில் 98 சதவீதம் பேர் இயேசுவை அறியாதவர்கள், இயேசுவை புரியாதவர்கள் அவர் சொற்படி நடக்காதர்கள் இன்று தங்களை கிறிஸ்த்துவர்கள் என்று அழைத்து கொள்ளும் மனிதர்கள் அவர் கூறியப்படி மட்டுமே வாழ்க்கை முறையை நடத்தி கொண்டிருந்தால் இன்யை உலகில் எந்த சிக்கலுமே இல்லாமல் இருந்திருக்கும்
ஆனால் அப்படி யாருமே இல்லை அதனால் கிறிஸ்த்துவ மதத்திற்கும், இயேசுவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எனது உறுதியான கருத்து அதனாலும் இன்றைய பாதிரியார்களில் பலர் மனிதர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட வேண்டுமானால் கிறிஸ்த்தவ சமயத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஞானஸ்தானம் செய்து கொண்டால் மட்டுமே முடியும் என்று பகிரங்கமாகவே சொல்லி வருகிறார்கள் அதனால்தான் ஏசு கூட பிறப்பால் கிறிஸ்த்தவர் அல்ல என்று சொன்னேன்
சில கிறிஸ்த்துவ இணையதளங்கள் உங்கள் எழுத்துக்கள் குழந்தைதனமானது என விமர்சித்துள்ளதே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
அவர்கள் எனது எழுத்துக்கள் அர்த்தமற்றவைகள் என்ற பொருளில் குழந்தைதனமானது என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தால் அதில் ஆழ்ந்த உண்மையிருப்பதாக நான் கருதவில்லை. ஒரு சொல்லானது ஒருவனை சுடுகிறது என்றால் கோபமடைய செய்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு உண்மை சிறிதளவாவது இருக்க வேண்டும்
அப்படி சொல்லாமல் பொதுவாக குழுந்தைனம் என்று சொன்னால் நிச்சயம் அது எனக்கு சந்தோஷம் தருகின்ற செய்திதான் மேதாவித்தனம் கர்வம் என்ற வார்த்தைகளை ஒரு வேளை அவர்கள் பயன்படுத்தினால் என்னை திருத்திக் கொள்ள நான் முயற்ச்சிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்த்து கூட ஒரு இடத்தில் குழந்தைகளைபோல இருப்பவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்கிறார் வேறொரு இடத்தில் குழந்தைகளை என்னிடம் வர தடை செய்யாதீர்கள் என்றும் சொல்கிறார் குழந்தைகள் கபடமற்றவர்கள், வஞ்சனை, சூது அறியாதவர்கள் அதனால் அவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்கள் எனவே எனது எழுத்துக்கள் குழநதைதனமாக இருப்பதையே நான் விரும்புகிறேன் அதற்காக மரணகாலம் வரையில் கூட பாடுபட தயாராக இருக்கிறேன்.
அப்படி சொல்லாமல் பொதுவாக குழுந்தைனம் என்று சொன்னால் நிச்சயம் அது எனக்கு சந்தோஷம் தருகின்ற செய்திதான் மேதாவித்தனம் கர்வம் என்ற வார்த்தைகளை ஒரு வேளை அவர்கள் பயன்படுத்தினால் என்னை திருத்திக் கொள்ள நான் முயற்ச்சிக்க வேண்டும்.
இயேசு கிறிஸ்த்து கூட ஒரு இடத்தில் குழந்தைகளைபோல இருப்பவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்கிறார் வேறொரு இடத்தில் குழந்தைகளை என்னிடம் வர தடை செய்யாதீர்கள் என்றும் சொல்கிறார் குழந்தைகள் கபடமற்றவர்கள், வஞ்சனை, சூது அறியாதவர்கள் அதனால் அவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்கள் எனவே எனது எழுத்துக்கள் குழநதைதனமாக இருப்பதையே நான் விரும்புகிறேன் அதற்காக மரணகாலம் வரையில் கூட பாடுபட தயாராக இருக்கிறேன்.
அருள் தந்தை டேவிட் அடிகளார் என்பவர் உங்கள் கருத்துக்களை மறுத்து எழுதப்போவதாக சொல்கிறாரே...?
அருள்தந்தை டேவிட் அடிகளாருடைய கண்ணியமான விமர்சனத்தை நானும் படித்தேன் அவர் என் கருத்துக்களை மறுதலித்து இருந்தாலும் கூட ஆக்க பூர்வமான பல விஷயங்களை தெளிவுப்பட சொல்லியிருந்தார். அவர் குறிப்பாக இயேசுநாதர் பாவம் செய்திருப்பதாக நான் சொல்லியதை வேதனையோடு மறுத்து இருக்கிறார்
ஆனால் உண்மையில் இயேசுவை ஒரு பாவி என்ற நோக்கில் நான் அப்படி எழுதவில்லை. அவரே பாவம் செய்திருந்தாலும் அதற்கு மன்னிப்பு மட்டுமே முடிவானதாக இருக்காது என்ற நோக்கில் தான் எழுதியிருந்தேன். இயேசு இறைமகன் அவரால் பாவம் செய்ய முடியாது என அருள்திரு அடிகளார் சொல்கிறார்
நான் இயேசுவை மட்டுமல்ல மனிதர்கள் அனைவரையும் இறைமக்களாக கருத வேண்டுமென நினைக்கிறேன் ஆனாலும் மனித சரீரம் என்று வரும் போது கர்மதளை கூடவே வரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை கடவுளான கண்ண பெருமான் கூட தர்மத்தை நிலை நிறுத்த பாரதயுத்தத்தை நடத்தி ஆசை வயப்பட்ட கௌரவர்களை அழித்தத்தினால் காந்தாரியின் சாபம் பெற்றான்
அதனால் தான் கண்ணனின் இறுதிகாலம் யாரும் அறியாதவண்மை இறுதி மரியாதை செய்ய உடல் கூட கிடைக்காத வண்ணம் அமைந்தது இயேசு கிறிஸ்த்துவும் மனிதர்களின் பாவத்திற்காகத் தான் சிலுவையில் ரத்தம் சிந்துகிறார். ஆகவே யுக புருஷர்கள் தாங்கள் பாவம் செய்யவில்லை என்றாலும் உலகத்தவர் பாவத்தை தாங்க வேண்டிய நிலையில் ஒரு வினாடியேனும் பாவிகளாகத்தான் இருக்கிறார்கள். இது என் சொந்த கருத்து இதை மறுத்து சொல்ல அடிகளார் அவர்களுக்கு பூரண உரிமை உண்டு அவர் மறுப்பு எனக்கு நியாயமாகப்பட்டால் அதை பகீரங்கமாகவே ஏற்று கொள்வேன். அவரின் மறுப்புறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அருள்தந்தை டேவிட் அடிகளாருடைய கண்ணியமான விமர்சனத்தை நானும் படித்தேன் அவர் என் கருத்துக்களை மறுதலித்து இருந்தாலும் கூட ஆக்க பூர்வமான பல விஷயங்களை தெளிவுப்பட சொல்லியிருந்தார். அவர் குறிப்பாக இயேசுநாதர் பாவம் செய்திருப்பதாக நான் சொல்லியதை வேதனையோடு மறுத்து இருக்கிறார்
ஆனால் உண்மையில் இயேசுவை ஒரு பாவி என்ற நோக்கில் நான் அப்படி எழுதவில்லை. அவரே பாவம் செய்திருந்தாலும் அதற்கு மன்னிப்பு மட்டுமே முடிவானதாக இருக்காது என்ற நோக்கில் தான் எழுதியிருந்தேன். இயேசு இறைமகன் அவரால் பாவம் செய்ய முடியாது என அருள்திரு அடிகளார் சொல்கிறார்
நான் இயேசுவை மட்டுமல்ல மனிதர்கள் அனைவரையும் இறைமக்களாக கருத வேண்டுமென நினைக்கிறேன் ஆனாலும் மனித சரீரம் என்று வரும் போது கர்மதளை கூடவே வரும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை கடவுளான கண்ண பெருமான் கூட தர்மத்தை நிலை நிறுத்த பாரதயுத்தத்தை நடத்தி ஆசை வயப்பட்ட கௌரவர்களை அழித்தத்தினால் காந்தாரியின் சாபம் பெற்றான்
அதனால் தான் கண்ணனின் இறுதிகாலம் யாரும் அறியாதவண்மை இறுதி மரியாதை செய்ய உடல் கூட கிடைக்காத வண்ணம் அமைந்தது இயேசு கிறிஸ்த்துவும் மனிதர்களின் பாவத்திற்காகத் தான் சிலுவையில் ரத்தம் சிந்துகிறார். ஆகவே யுக புருஷர்கள் தாங்கள் பாவம் செய்யவில்லை என்றாலும் உலகத்தவர் பாவத்தை தாங்க வேண்டிய நிலையில் ஒரு வினாடியேனும் பாவிகளாகத்தான் இருக்கிறார்கள். இது என் சொந்த கருத்து இதை மறுத்து சொல்ல அடிகளார் அவர்களுக்கு பூரண உரிமை உண்டு அவர் மறுப்பு எனக்கு நியாயமாகப்பட்டால் அதை பகீரங்கமாகவே ஏற்று கொள்வேன். அவரின் மறுப்புறைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இன்னும் சில கிறிஸ்த்துவ தளங்கள் உங்களையும் உங்கள் உஜிலா தேவி தளத்தையும் சைத்தான் என்று வர்ணணை செய்கிறதே?
பொதுவாக நிறைய கிறிஸ்த்துவ பிரச்சாரர்களும், பிரசங்கிகளும் மாற்று மதத்தவர்களை மாற்று கருத்து உடையவர்களை மாற்று மத தெய்வங்களை சைத்தான்கள் என்ற வார்த்தையிலேயே அழைக்கிறார்கள்
அப்படி அழைக்கும் போது அதற்கு அவர்கள் என்ன பொருள் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே சொல்லத் தெரியாது ஒரு மனிதன் தான்தான் நல்லவன் தான் நடக்கும் வழி தான் சரியானது மற்றவர்கள் அனைவருமே தவறானவர்கள் என்று சொல்ல துவங்குவானேயானால் அவனுக்கு தெளிவான மதி இருப்பதாக யாரும் சொல்ல மாட்டார்கள்.
தன்னை மட்டுமே உயர்ந்தவனாக கருதுகின்றவன் தான் சிறந்த அழிவு சக்தியாக இருந்திருக்கிறான் என்று சரித்திரம் பல சான்றுகளை நமக்கு சுட்டி காட்டுகிறது.
பொதுவாக நிறைய கிறிஸ்த்துவ பிரச்சாரர்களும், பிரசங்கிகளும் மாற்று மதத்தவர்களை மாற்று கருத்து உடையவர்களை மாற்று மத தெய்வங்களை சைத்தான்கள் என்ற வார்த்தையிலேயே அழைக்கிறார்கள்
அப்படி அழைக்கும் போது அதற்கு அவர்கள் என்ன பொருள் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே சொல்லத் தெரியாது ஒரு மனிதன் தான்தான் நல்லவன் தான் நடக்கும் வழி தான் சரியானது மற்றவர்கள் அனைவருமே தவறானவர்கள் என்று சொல்ல துவங்குவானேயானால் அவனுக்கு தெளிவான மதி இருப்பதாக யாரும் சொல்ல மாட்டார்கள்.
தன்னை மட்டுமே உயர்ந்தவனாக கருதுகின்றவன் தான் சிறந்த அழிவு சக்தியாக இருந்திருக்கிறான் என்று சரித்திரம் பல சான்றுகளை நமக்கு சுட்டி காட்டுகிறது.
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருந்த காலத்தில் வேடிக்கையாக இந்து மத புராணங்களையும் பைபிள்,குரான், தம்பதம், ஸ்ரீபுராணம் போன்ற புனித நூல்களையும் விமர்சிப்பது வழக்கம்
அப்படி பைபிளை விமர்சிக்கும் போது உலகத்தை படைத்த கர்த்தர் எல்லாவற்றையும் படைத்து விட்டு கடைசியில் ஆதாம் என்ற மனிதனையும் அவன் விலா எலும்பிலிருந்து ஏவாள் என்ற மனுஷியையும் படைத்து ஏதேன் என்ற தோட்டத்தில் விட்டாராம் நீங்கள் இங்குள்ள எல்லா கனி வர்க்கங்களையும் புசியுங்கள் அதோ அந்த பழத்தை மட்டும் புசிக்காதீர்கள் அதை மீறி அதை நீங்கள் உண்டால் மரித்தே போவீர்கள் என்று ஒரு மரத்தை காட்டி ஆதாம்,ஏவாளிடம் கர்த்தர் சொன்னாராம்.
ஆதாமும் ஏவாளும் அந்த மரம் பக்கமே போவது கிடையாதாம் ஒரு நாள் ஏதேன் தோட்டத்திற்கு வந்த சைத்தான் இந்த மரத்துக் கனியை புசித்தால் நீங்கள் சாகமாட்டீர்கள் மாறாக கடவுளை போல ஆவீர்கள் என ஆசை மொழி சொன்னதாம் ஏவாளும் அந்த பழத்தைப் பறித்து தானும் உண்டு தனது புருஷனுக்கும் கொடுத்தாளாம்
அப்படி பைபிளை விமர்சிக்கும் போது உலகத்தை படைத்த கர்த்தர் எல்லாவற்றையும் படைத்து விட்டு கடைசியில் ஆதாம் என்ற மனிதனையும் அவன் விலா எலும்பிலிருந்து ஏவாள் என்ற மனுஷியையும் படைத்து ஏதேன் என்ற தோட்டத்தில் விட்டாராம் நீங்கள் இங்குள்ள எல்லா கனி வர்க்கங்களையும் புசியுங்கள் அதோ அந்த பழத்தை மட்டும் புசிக்காதீர்கள் அதை மீறி அதை நீங்கள் உண்டால் மரித்தே போவீர்கள் என்று ஒரு மரத்தை காட்டி ஆதாம்,ஏவாளிடம் கர்த்தர் சொன்னாராம்.
ஆதாமும் ஏவாளும் அந்த மரம் பக்கமே போவது கிடையாதாம் ஒரு நாள் ஏதேன் தோட்டத்திற்கு வந்த சைத்தான் இந்த மரத்துக் கனியை புசித்தால் நீங்கள் சாகமாட்டீர்கள் மாறாக கடவுளை போல ஆவீர்கள் என ஆசை மொழி சொன்னதாம் ஏவாளும் அந்த பழத்தைப் பறித்து தானும் உண்டு தனது புருஷனுக்கும் கொடுத்தாளாம்
அதன் பின்னரே அவர்கள் இருவரும் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை அறிந்து கொண்டார்களாம் கடவுளாகிய கர்த்தர் சொல்லிய படி அவர்கள் சாகவில்லை சைத்தான் சொல்லியபடி மட்டும் அவர்கள் செய்யவில்லை என்றால் மனித குலம் ஆடு,மாடுகளாக இருந்து முன்னேற்றம் காணாமலேயே போயிருக்கும் இன்றைய வளர்ச்சியை கனவில் கூட கண்டிருக்க முடியாது இன்னும் ஒருபடி சொல்லப் போனால் கர்த்தரின் வார்த்தையை ஏற்று ஆதாமும்,ஏவாளும் நடந்திருந்தால் அற்புத சுகமளிக்கும் சுவிசேச கூட்டங்கள் போடுவதற்கும் அலேலுயா ஓசன்னா என கோஷம் போடுவதற்கும் ஒரு ஆள் கூட கிடைத்திருக்க மாட்டார்கள் என்று பேசுவேன்.
அந்த நண்பர்கள் என்னைஅந்த வழியில் சைத்தான் என அழைத்திருந்தால் நிச்சயம் சந்தோஷமே பொய் பேசுகின்ற கடவுளைவிட உண்மை பேசுகின்ற சாத்தான் மிகச்சிறந்தது ஆகும். எனவே அந்த நண்பர்களைப் பொறுத்தவரை நான் சாத்தானாக இருப்பதில் பெறுமைபடுகிறேன்
இப்படி நான் பேசுவது நிச்சயம் கிறிஸ்த்த பிரசங்கிகளுக்கு கோபத்தைத்தான் தரும் ஏனென்றால் இதுவரை அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைத்தான் விமர்சித்து பழக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றவர்கள் விமர்சனத்தை தாங்கி அதிகம் பழகப்படவில்லை
இதற்காக உண்மையான கிறிஸ்தவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் ஏன் என்றால் ஆதாம்,ஏவாள் கதையின் உண்மை தத்துவம் வேறு என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதை நானும் உணர்வேன்.
அந்த நண்பர்கள் என்னைஅந்த வழியில் சைத்தான் என அழைத்திருந்தால் நிச்சயம் சந்தோஷமே பொய் பேசுகின்ற கடவுளைவிட உண்மை பேசுகின்ற சாத்தான் மிகச்சிறந்தது ஆகும். எனவே அந்த நண்பர்களைப் பொறுத்தவரை நான் சாத்தானாக இருப்பதில் பெறுமைபடுகிறேன்
இப்படி நான் பேசுவது நிச்சயம் கிறிஸ்த்த பிரசங்கிகளுக்கு கோபத்தைத்தான் தரும் ஏனென்றால் இதுவரை அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைத்தான் விமர்சித்து பழக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றவர்கள் விமர்சனத்தை தாங்கி அதிகம் பழகப்படவில்லை
இதற்காக உண்மையான கிறிஸ்தவர்கள் என்னை மன்னிக்க வேண்டும் ஏன் என்றால் ஆதாம்,ஏவாள் கதையின் உண்மை தத்துவம் வேறு என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதை நானும் உணர்வேன்.