Store
  Store
  Store
  Store
  Store
  Store

இன்னும் ஜெயலலிதா மாறவில்லையா?


  கால்காசு என்றாலும் கவர்மெண்ட் காசு வேண்டும் என்று கிராமத்தில் சொல்வார்கள்

 அந்த அளவிற்கு அரசு உத்தியோகத்தின் மேல் மக்களுக்கு அபிமானம் இன்னும் இருக்கிறது

 சாதாரண மக்களை பற்றி சொல்வானேன் படித்து பட்டம் பெற்றவர்களும் இளையத்தலைமுறையினரும் கூட அரசாங்க வேலையை காதலிக்கிறார்கள்

 எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் தனது மகளை தனியார் துறையில் நல்ல வேலையிலிருந்த நல்ல நல்ல மாப்பிள்ளைக்கெல்லாம் கொடுக்காமல் வெகு நாள் காத்திருந்து சற்று வயசான கவர்மெண்ட் மாப்பிள்ளைக்கு கொடுத்தார் 


 இப்போதெல்லாம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று நான் கேட்டபோது சம்பளம் முக்கியமல்ல உத்தியோகப் பாதுகாப்புத்தான் முக்கியமானதனப் பதில் சொன்னார்

இது சரியான நம்பிக்கையா? அவநம்பிக்கயா என்று நமக்குத் தெரியாது

ஆனால் நம்ம தமிழ்நாட்டு ஜனங்க இப்படி நம்புகிறார்கள்

 இந்த நம்பிக்கையை சாதகமாகப்பயன் படுத்திக் கொண்டு அரசியல் கட்சிகளை சேர்ந்த வட்டம் மாவட்டம் எனத் துவங்கி அமைச்சர்கள் வரையில் தனி மகசூலே நடக்கிறது 


 சென்ற ஆட்சி துவங்கியவுடன் அமைச்சரான ஒருவரிடம் தனது மகனுக்கு பேருந்து நடத்துனர் வேலைக்காக இரண்டு லச்ச ரூபாய் கொடுத்து விட்டுஆட்சி முடியும் வரை காத்திருந்தார் எனக்குத் தெரிந்த பெரியவர்

 இப்படி ஏராளமானவர்களை தமிழ்நாடு முழுவதும் பார்க்கலாம்

 அரசாங்க வேலை பெருவதற்கு ஆள் சிபாரிசு வேண்டும் பெட்டி நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டும் சிறிதளவு திறமை இருந்தால் கூட போதுமானது எப்படியும் வேலை வாங்கிவிடலாம் என பலர் நம்பிக்கொண்டிருந்தனர்

ஆனால் இப்போது அந்த நம்பிக்கையிலும் இடிவிழுந்திருக்கிறது


 அரசு வேலைக்கு சிபாரிசு லஞ்சம் திறமையெல்லாம் போதாது நாக்கையும் வெட்டிக் கொள்ள வேண்டும் என்று புதிய பார்மூலாவை ஒரு பெண்மணி தமிழ்நாட்டிற்கு வழங்கியிருக்கிறார்

 நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ஒருவேளை தமிழ்நாட்டில் இனி எல்லா புதிய அரசு ஊழியர்களும் நாக்கறுத்தவர்களாய் காது வெட்டியவர்களாய் தலையில்லாதவர்களாய் தான் காண நேறிடுமா என நடுக்கமாகவும் இருக்கிறது

 ஒரு ஏழைப் பெண்ணுக்கு உதவி செய்ததை எப்படி தப்பென்று சொல்ல முடியும்? என சிலர் கேட்கலாம்

 உதவி செய்ததை யாரும் விமர்சிக்க வில்லை ஆனால் நாக்கை அறுத்து கொண்டதை மட்டுமே காரணமாக வைத்து அரசு வேலை கொடுப்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?


  அந்த பெண்மணி தமிழ்நாட்டுக்காக எதாவது சாகசங்கள் புரிந்து உடல் உறுப்பை பறி கொடுத்தார் என்றால் அவருக்கு அரசு உதவி செய்வதில் நியாயம் இருக்கிறது

 தமிழ் மக்களுக்காக எதாவது செய்திருந்தால் கூட பாராட்டலாம்

 ஆனால் அவர் செய்திருப்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் வெற்றிக்காக

இதை பாராட்டுவதோ பரிசு அளிப்பதோ தவறுதலான முன்னுதாரனமாகும்

பொதுவாக திமுக ஆட்சி என்றால் தலைவர்களை காக்கா பிடிக்க தோரணங்கள் வைப்பது ஆடம்பர கட் அவுட்டுகள் வைப்பது என்பது வழக்கம்


  அதிமுக ஆட்சி என்றால் தலைவிக்காக பால் குடம் சுமப்பது அலகு குத்துவது நெருப்பு மிதிப்பது என்று நடப்பது வழக்கம்

 ஆனால் இப்போதைய இந்த பழக்கம் மிகவும் விபரிதமானது ஒரு வேளை முதல்வர் ஜெயலலிதா இப்படி பட்ட மூட தனத்தை விரும்புகிறாரோ என்னவோ?

 ஒரு வேளை அது தான் நிஜம் என்றால் ஜெயலலிதா இன்னும் மாற வில்லை ஆப்படியே தான் இருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ள வகை ஏற்படும்

தலைமை செயலகத்தை மாற்றுவது அச்சிட்ட புத்தகங்களை குப்பையில் போடுவது நாக்கை அறுத்தவருக்கு அரசாங்க வேலை கொடுப்பது என்ற தொடர்ச்சியான நிகழ்வுகளை காணும் போது தமிழக மக்களுக்கு கிலி ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை


 கருணாநிதி அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் தண்டனை கொடுத்து சூடு இன்னும் தனிய வில்லை

அதற்குள் அதே தவறுகளை இவரும் ஆரம்பித்தால் மக்கள் கையில் உள்ள சாட்டை திரும்பி விடும்

செய்ய வேண்டிய ஆக்க பூர்வ பணிகள் எத்தனையோ உண்டு அதை விட்டு விட்டு இத்தகைய காரியங்களில் ஈடு படுவது யானை தலையில் மண்ணை வாரி போட்டது போல் ஆகி விடும்

அதனால் பழைய ஆசைகளை கழற்றி வைத்து விட்டு புதிய செயல்களை முதல்வர் செய்வது அவசியம்

இதை மறந்தால் நாட்டுக்கும் நல்லது நடக்காது அவருக்கும் நல்லது கிடைக்காது 






 

Contact Form

Name

Email *

Message *