நினைத்தால் பயம் வருகிறது

,

  • யா என் மனைவி கடந்த மூன்று மாத காலமாக இரவில் திடீர் என்று விழித்து கொள்கிறாள் விழித்தவுடன் என்னையும் எழுப்பி எனக்கு பயமாக இருக்கிறது என் கையை பிடித்து கொள்ளுங்கள் என்கிறாள் இருட்டிற்குள் யாரோ தன்னை வெறித்து பார்ப்பதாகவும் சொல்கிறாள் பகலிலும் சோர்வோடு காணப்படுகிறாள் சரியாக சாப்பிடுவது கிடையாது குளிப்பது ஆடை மாற்றுவது கூட சரிவர செய்வதில்லை எங்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது இதுவரை குழந்தை இல்லை இப்போது ஆறு மாதமாகத்தான் என் வேலையின் நிமித்தம் ஈரோட்டில் தனிக்குடித்தனம் செய்கிறோம் இதற்கு முன் அம்மா அப்பாவோடு தான் இருந்தோம் எனக்கு அவள் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது அவளுக்கு இருப்பது மன நோயா அல்லது எதவது பேய் பிசாசு தொல்லையா தயவு செய்து எதுவாக இருந்தாலும் அது தீறுவதற்கு வழி கூறவும் 

பார்த்தசாரதி,ஈரோடு 



  நீங்கள் அனுப்பிய உங்கள் மனைவியின் ஜாதகத்தை கவனத்தோடு பரிசீலினை செய்தேன் அதில் அவருக்கு ஆவி போன்ற அமானுஷ்யமான தொல்லைகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை அதே நேரம் அவருக்கு மன நோய் வருவதற்கான சூழலும் கிடையாது அப்படி என்றால் இந்த மாதிரியான சூழல் இருக்கிறதே இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கேட்கலாம் 

உங்கள் மனைவிக்கு மனோகாரனான சந்திரனின் ஆதிக்கம் அதிகம் இதனால் மனதில் அதிதமான எண்ணங்களும் குழப்பங்களும் அச்சங்களும் ஏற்படுவது இயற்க்கை சுபாவமாக இருக்கும் அதன் அடிப்படையில் அவர் இப்போது மிகவும் பயந்த நிலையிலேயே இருப்பது தெரிகிறது 

மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பார்க்கும் போது நீங்கள் இருக்கும் வீட்ற்கு எதிர் வீட்டில் இருப்பவரை பார்த்து உங்கள் மனைவி தேவையற்ற பயத்தை வளர்த்திருக்க வேண்டும் அங்கே முரட்டு ஆசாமியாகவும் கொடுரம் போன்ற பார்வை உடையவராகவும் யாரவது இருக்கலாம் 

அவரால் தான் தனியாக இருக்கும் போது தனக்கு தொல்லை வருமோ என்ற கற்பனை பயம் உங்கள் மனைவி இடம் உருவாகி இருப்பதே இந்த பிரச்சனையின் மூல காரணம் எனவே நீங்கள் செய்ய வேண்டியது மருத்துவரை அணுகுவதோ மந்திரவாதியிடம் மந்திரிப்பதோ அல்ல உடனடியாக குடியிருக்கும் வீட்டை மாற்றுங்கள் எல்லாம் சரியாகி விடும் கவலை இல்லை.



0 comments to “நினைத்தால் பயம் வருகிறது”

Post a Comment

 

இன்றைய பதிவு

வாசகர் கடிதம்

உஜிலாதேவி Copyright © 2010