அம்மணம் அசிங்கமில்லை

,

ல சந்நியாசிகள் நிர்வாணமாக ஊர்வலம் போவது நமது மதத்தை பற்றி மற்றவர்கள் கேவலமாக கருதமாட்டார்களா? என்று பலர் நினைத்து வறுத்த படுகிறார்கள் 

உடம்பில் துளி கூட துணியில்லாமல் இருப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை என்று நாம் நினைக்கிறோம்.  ஆனால் உண்மையில் ஆடையோடு இருப்பதை விட அம்மணமாக இருப்பதில் தான் மகா சிரமம் இருக்கிறது. 

மழை, குளிரை அம்மணம் தாங்காது என்பது வேறு விஷயம்.  ஆடை அணிகின்ற போது நமக்குள் அந்தரங்கமாக ஏற்படும் உணர்வுகளை மறைத்து கொள்ளலாம்.  


ஆடையில்லாத நிலையில் உணர்ச்சிகளை மறைப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.  அவ்வளவு சுலபமாக எல்லோராலும் நிர்வாணமாகயிருக்க இயலாது. 

ஒரு குழந்தை நிர்வாணமாகயிருப்பது பற்றி வெட்கப்படுவதில்லை. 

அது எப்பொழுது மற்றவர்களை பார்த்து தனது நிர்வாணத்தை மறைக்க துவங்குகிறதோ அப்போதே அதன் மனதில் கள்ளம் கபடம் உருவாக துவங்கி விட்டது என பல மனோ தத்துவ நூல்கள் சொல்கின்றன.

  ஒரு சராசரி மனிதன் அம்மணமாக இருக்கிறான் என்றால் ஒன்று அவன் மனம் பேதலித்த நிலையில் இருக்க வேண்டும் அல்லது ஆண், பெண் பேதத்தை அழித்தவனாக இருக்க வேண்டும்.

 வாரனாசியில் பல நாகசாதுக்கள் நிர்வாணமாக ஊர்வலம் போவதை நாம் கேலி செய்கிறோம்.  அல்லது முகம் சுளிக்கிறோம்.  


ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கொட்டும் மழையிலும், உறைய வைக்கும் பனியிலும் நிர்வாணமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் அவர்களின் மகத்துவம் என்னவென்று புரியும்.

 ஜைன மதத்தை சார்ந்த பல துறவிகள் நிர்வாணமாக இருக்கிறார்கள்.  அதை எந்த ஜைன மதத்தவரும் அவமானமாக கருதுவதுயில்லை.

 ஏனென்றால் ஜைன மத தத்துவம் ஒவ்வொரு ஜைனனுக்கும் தெரியும்.

 ஆனால் இந்துக்களாகிய நாம் தான் நமது மதத்தின் தத்துவங்களின் ஒரு சிறு துளியை கூட அறியாமல் வீண் ஜம்பம் பேசிக் கொண்டுயிருக்கிறோம்.

  நம் கருத்துக்களை நாம் உணர துவங்கிவிட்டால் உண்மைகள் தெரியும். அவமானம் தெரியாது 





பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற

உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்:

2 comments:

  1. ஏற்றுக்கொள்ளும் தத்துவமே.....ஒன்றை இரண்டுவிதமாக விளக்கிவிடலாம் ....இரண்டுவிளக்கமும்...வாதத்திறமை உண்டுன்றால் சரியாகவே தோன்றும் .
    ஆனால் நடை முறை ?சாதானமக்களின் வாழ்க்கை தரம் ? நாகசன்யசிகள் அசாதானமான வற்றை சாதாரமானதாக்கி கொண்டவர்கள் சந்தேகமே இல்லை .சாதாரன ஜனம்?அவர்களை புரிந்துகொள்ளும் அளைவ்க்கு பக்குவம் பெறவில்லை ....இல்லையென்றால் எதிர் திசையில் நின்றுகொண்டு ...தானும் உடைகளுக்குவுள்ளே நிர்வாணமாகவே உள்ளேன் என்ற உண்மையை, உணர்ச்சிகளை (காம)கடக்க முடியாத சாதார மனிதானாக நின்று கொண்டு விமர்சிக்கும் ஒன்றாகவே உள்ளார்கள் ...தமிழ் மன்னன்

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்...........
    உண்மை சிலருக்கு பிடிப்பதில்லை .............
    நன்றி ஐயா...............

    ReplyDelete

 

இன்றைய பதிவு

வாசகர் கடிதம்

உஜிலாதேவி Copyright © 2010